2 வருட சட்டப் படிப்பு ஓராண்டு படிப்பாக மாற்றம்!

, by questionbank2u

2 வருட சட்டப் படிப்பு ஓராண்டு படிப்பாக மாற்றம்!பிப்ரவரி 21,2014,


சண்டிகர்: பஞ்சாப் பல்கலையில், தற்போது வழங்கப்பட்டு வரும் 2 ஆண்டு எல்.எல்.எம்., சட்டப் படிப்பு, ஓராண்டு முதுநிலை சட்டப் படிப்பாக மாற்றம் செய்யப்படவுள்ளது. பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இதுதொடர்பான முடிவு எடுக்கப்படவுள்ளது.
சிண்டிகேட் அனுமதி கிடைத்தவுடன், வரும் 2014 - 15ம் கல்வியாண்டிலிருந்து இப்படிப்பு தொடங்கப்படும். அதேசமயம், இந்தப் படிப்பானது, பகல் நேரத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட துறையிலிருந்து விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தொடர்புடைய வட்டாரங்கள் கூறியதாவது: பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய முயற்சிகளின் படியே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் பரிந்துரையின் அடிப்படையிலேயே படிப்பின் காலகட்டத்தை மாற்றியுள்ளோம்.
இப்படிப்பை, நாட்டின் பல கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே வழங்கி வருகின்றன. அதேசமயம், இப்ப்படிப்பில் சில கட்டாய பாடங்களும் இடம்பெற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 comments:

Post a Comment