1,400 இளநிலை உதவியாளர்கள் பள்ளிக்கல்வித் துறையில் பணி நியமனம்

, by questionbank2u

1,400 இளநிலை உதவியாளர்கள் பள்ளிக்கல்வித் துறையில் பணி நியமனம்

எழுத்தின் அளவு :
சென்னை: பள்ளிக் கல்வி துறையில் 1,395 இளநிலை உதவியாளர்கள் வரும் 25, 26ம் தேதிகளில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்வு பெற்ற இளநிலை உதவியாளர்களில் 1,395 பேர் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நிகழ்ச்சி ஆன்-லைன் வழியில் வரும் 25ம் தேதி மற்றும் 26ம் தேதி நடக்கிறது. தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களின் முகவரி அடங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டும்.
ஒரு மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு 25ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கிறது. சொந்த மாவட்டங்களில் காலியிடம் இல்லாதவர்களுக்கும், வெளி மாவட்டங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கும் 26ம் தேதி காலை 9:00 மணிக்கு கலந்தாய்வு நடத்தப்படும்.
தேர்வு பெற்றவர்கள் ஒரு மணி நேரம் முன்னதாக முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வர வேண்டும். டி.என்.பி.எஸ்சி.யால் வழங்கப்பட்ட துறை ஒதுக்கீட்டு உத்தரவு, கல்வி சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்களை தவறாமல் கொண்டு வர வேண்டும். இவ்வாறு இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

0 comments:

Post a Comment